யாழ்.கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரி பரிசளிப்பு விழா

0
315

யாழ்ப்பாணம் – கரவெட்டி விக்கினேஸ்வரா கல்லூரியின் 2023ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று பிற்பகல், கல்லூரி அதிபர் பொ.அரவிந்தன் தலைமையில் இடம்பெற்றது.

முதல் நிகழ்வாக வீதியிலிருந்து விருந்தினர்கள் விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்தை தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

தொடர்ந்து வரவேற்புரை, ஆசி உரைகள் இடம்பெற்று நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வில் கல்லூரியின் சாதனையாளர்கள் பரிசில்கள், பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சிறப்பு உரையினை யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா நிகழ்த்தினார்.

கரவெட்டி மூத்த விநாயகர் ஆலய பிரதம குரு சிறிலசிறி விஸ்வநாதக்குருக்கள், செவ்வந்திநாதக்குருக்கள், மணல்காடு பங்குத் தங்தை ஜோன் குருஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உதவி திட்டமிடல் பணிப்பாளர் விஸ்வநாதக் குருக்கள், ஹாட்லிக் கல்லூரி அதிபர் மற்றும் அயல் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கல்லூரியின் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.