ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள வெள்ளை மாளிகை, எதிர்வரும் 7ஆம் திகதி ஜோ பைடன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புது டெல்லியில் எதிர்வரும் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
இந்தநிலையில் எதிர்வரும் 8ம் திகதி இந்திய பிரதமருக்கும், அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
அத்துடன் ஜி20 மாநாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலைமை என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.