ரயில் சாரதிகளின் போராட்டம் நிறைவு!

0
123

சாத்தியமான கலந்துரையாடல்களை அடுத்து, ரயில் இயந்திர சாரதிகள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று மாலை கைவிடப்பட்டது.

ரயில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டவர்களுக்கு மத்தியில் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது சாதகமான இணக்கப்பாடுகள் எடுக்கப்பட்டதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ரயில் இயந்திர சாரதிகள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது.

5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த இரு நாட்களாக ரயில் இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக, கொழும்பு கோட்டை மற்றும் மருதானை உள்ளிட்ட 32 ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.