உலகக் கிண்ண கிரிக்கெட் : இலங்கை- அவுஸ்திரேலிய அணிகள் மோதல்

0
136

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கும் மூன்றாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் இதற்கு முதலில் இடம்பெற்ற போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக காயம் காரணமாக கிரிக்கட் அணியில் இருந்து விலகியதுடன், அணியை வழிநடத்தும் பொறுப்பு துணைத் தலைவர் குசல் மெண்டிஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஷானகவின் காயம் குணமடையும் வரை சகலதுறை ஆட்டக்காரர் சாமிக்க கருணாரத்ன அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவுக்கும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என நம்பப்படுகிறது.

இன்று விளையாடும் இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தசுன் ஷானக்கவுக்குப் பதிலாக துனித் வெல்லாலகே 7வது இடத்தில் பெயரிடப்படவுள்ளதோடு, சாமிக்க கருணாரத்ன 8வது இடத்துக்குப் பெயரிடப்படுவதற்கான வாய்ப்பும், வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார, மதீஷ பத்திரன ஆகியோர் அணியில் இணைவதற்கான வாய்ப்பும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் 26வது தலைவராக பெயரிடப்பட்டுள்ள குசல் மெண்டிஸ், இன்றைய போட்டியில் இலங்கை அணியை தீர்மானிக்கும் காரணியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.