செவனகல சீனித்தொழிற்சாலை மீண்டும் தயா கமகேவுக்கு

0
121

செவனகல சீனித் தொழிற்சாலையை முன்னாள் அமைச்சரான தயா கமகேவுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

அதற்கமைய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவை நீக்கிவிட்டு, மஹிந்த அமரவீரவை நியமிப்பதே இதன் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தொழிற்சாலையை தயா கமகேவுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதை ,அமைச்சர் ரமேஷ் பத்திரண நிராகரித்துள்ளதாகவும் அதன் காரணமாக பெருந்தோட்ட கைதொழில் அமைச்சிலிருந்து அவரை நீக்கிவிட்டு அதனை மஹிந்த அமரவீரவுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னரும் தயா கமகேவுக்கு இந்த தொழிற்சாலை பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்ததுடன், பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இந்த தொழிற்சாலை அரசுடன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதையளவில் செவனகன சீனித் தொழிற்சாலை நட்டம் ஈட்டும் நிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.