காசாவில் இடம்பெறும் போரை இடைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரியுள்ளார்.
மனிதாபிமான காரணங்களுக்காக போரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அவர் கோரியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் தொலைபேசி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதேவேளை தற்காலிக போர் நிறுத்தம், ஹமாஸ் தரப்பினருக்கான இராணுவ உதவிகளை அதிகரிப்பதற்கு வாய்ப்பளிக்கும் என சில மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.(தா)