பலஸ்தீனர்களை கைது செய்ய புதிய உத்தியை கையாலும் இஸ்ரேல்

0
63

காஸாவில் 33-வது நாளாகப் போர் தொடர்ந்து வருகிறது. காஸா மட்டுமில்லாது இஸ்ரேலின் ஆதிக்கத்தில் உள்ள மேற்குக் கரை பகுதியில் ஹமாஸ் ஆதரவாளர்கள் எனக் கருத்தப்படுகிறவர்கள் மீது தாக்குதலும் கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து வருகின்றன. 

நவம்பர் 7 ஆம் திகதி அன்று மேற்குக் கரையில் கைது நடவடிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெப்ரானில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரை இராணுவம் கைது செய்து தடுத்து வைத்துள்ளது. அந்தப் பகுதிகளில் கள நிலவரம் அளிப்பதற்கு பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பலஸ்தீன பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு ஐ.நாவிற்கு அளித்த அறிக்கையில் இதுவரை 30 பத்திரிக்கையாளர்கள் போர் ஆரம்பித்தது முதல் உயிரிழந்துள்ளதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பெண்களையும் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்து பலஸ்தீனர்களைச் சரணடைய இராணுவம் வலியுறுத்தி வருகிறது. இந்தச் சோதனைகளில் குழந்தைகள் கூட தப்பவில்லையெற தெரிவிக்கப்படுகிறது.