இரண்டு காட்டு யானைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
96
கிரிந்தி ஓயாவில் விழுந்த இரண்டு காட்டு யானைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பாலத்தில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளன. குடாஓயா, துலுல்ல பிரதேசத்தில் உள்ள கிராம மக்களினால் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு காப்பாளர்கள், பேக்ஹோ மூலம் சடலங்களை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.யானைகளில் ஒன்று ஆறடி உயரமும் சுமார் 30 வயது மற்றும் ஏனையது ஆறடி உயரமும் சுமார் 25 வயதும் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.மணல் அள்ளும் இடம் மற்றும் குவாரிக்கு செல்வதற்காக வணிகர் ஒருவரால் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.வனஜீவராசிகள் திணைக்களத்தின் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த தர்மகீர்த்தி, வெல்லவாய ரணகே காப்பாளர் நிஷாந்த பிரேமலால் மற்றும் OIC குடாஓயா பொலிஸ் சிஐ எஸ்.டி.எம். ரியோயாஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.