மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனித்தெரு, பத்தரமுல்ல, கல்கிஸ்ஸ, நுகேகொட மற்றும் சீதாவகபுர தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த தபால் நிலையங்கள் ஊடாக பொலிஸாரால் வழங்கப்படும் தண்டப் பணத்தை செலுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.