சர்வதேச ஜூடோ போட்டிக்காக ஜப்பான் செல்லவிருந்த கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலையின் மாணவன் தம்ம இந்துவர அத்தநாயக்க 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அத்தகல காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த பாடசாலையில் நான்கு 10ம் வகுப்புகள் உள்ளதாகவும், 2 வகுப்பு மாணவர்களே இந்த மாணவனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.பாடசாலையில் 10 ஆம் ஆண்டு வகுப்புகளுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருவதாகவும், அதற்கு பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், தீர்வு காணப்படவில்லை என்றும் மாணவர்களின் பெற்றோர் கூறுகின்றனர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், ஏ மற்றும் சி வகுப்புக் மாணவர்களே அவரைத் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.