ராஜபக்சர்களை ஜனாதிபதி பாதுகாத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டு

0
107

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் 8 காலாண்டுகளில் மீளச் செலுத்த 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியை எட்டியதாகவும், இதன் கீழ், ஒரு காலாண்டிற்கு 333 மில்லியன் டொலர்கள் பெறுவதாகவும், முதல் காலாண்டு பெறப்பட்டாலும், அரச ஊழல் மற்றும் திருட்டு, வருமான இலக்குகளை அடைய முடியாமை போன்ற காரணங்களினால் இரண்டாம் காலாண்டு தொகை கிடைக்காது போனதாகவும், வெற் வரி மற்றும் மின்சாரக் கட்டணங்கள் அதீதமாக அதிகரித்தமையினாலயே இந்த இரண்டாம் கட்ட தொகை கிடைக்கப்பெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று (13) இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் தனது இறுதி உரையை ஆற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை வங்குரோத்தடையச் செய்த திருடர்களுடனும் குறித்த தரப்பினருடனும் ஆட்சி செய்ய பயந்தாலும், தற்போதைய ஜனாதிபதி இதற்கு பயப்படாததால் எதற்கும் அஞ்சாமல் தொங்கு பாலத்தில் இருந்து ராஜபக்ச குடும்பத்தை மீட்டு கேக் கூட சாப்பிட்டார் என்றும், நாட்டின் 220 இலட்சம் மக்களை ஜனாதிபதி மறந்து விட்டாலும், நாட்டு மக்களை மறக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாரில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மின்கட்டணத்தை அதிகரித்து, வெட் வரியை அதிகபட்சமாக விதித்து மக்களை மரணப்படுக்கைக்கு தள்ளி, நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ச குடும்பத்தை சுவர்க்கலோகத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி செயல்பட்டார் என்றும், எதிர் காலங்களில் வெற் வரியால் கேஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து மக்களின் வாழ்க்கை சீரழிந்தாலும், ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்றும், ராஜபக்சர்கள் உட்பட மொட்டு மோசடிக்காரர்களை ஜனாதிபதி பாதுகாத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.