மலையக மக்கள் மீதான இந்திய அரசாங்கத்தின் ஆதரவுக்கு அமைச்சர் ஜீவன் நன்றி தெரிவிப்பு

0
91

இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கி வரும் அன்புக்கும், ஆதரவுக்கும், ஒத்துழைப்புகளுக்கும், மலையக மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை கௌரவப்படுத்தும் வகையில், பாரதிய ஜனதாக் கட்சியின் ஏற்பாட்டில், நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளமை, இதற்கு மற்றுமொறு சான்றாகும்.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து, 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், பாரதிய ஜனதாக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு முத்திரை வெளியீட்டு நிகழ்வு, இன்று இடம்பெற்றது.

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சிறந்த உறவு பாலமாக, அன்று முதல் இன்று வரை, காங்கிரஸ் இருந்து வருகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு, என்றும் நாம் ஒத்துழைப்புகளை வழங்குவோம்.

மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கம் பல உதவிகளை செய்துள்ளது.
வீடமைப்பு திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், தொழில் பயிற்சிகள் என அந்த பட்டியலை நீடித்துக்கொண்டே செல்லலாம்.

இந்த நிலையில், எமது மக்களை கௌரவப்படுத்தி நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளமை, எமது மக்கள் மீதான இந்தியாவின் கரிசனையை உறுதிப்படுத்துகின்றது. என அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.