கைப்பற்றப்பட்ட வர்த்தகரின் கார் விபத்தில் சிக்கியது :

0
96

எல்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான கார் ஒன்று நிதி நிறுவனம் ஒன்றின் குழுவினரால் கைப்பற்றப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி நிறுவனத்தின் அதிகாரிகள் எல்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்த பின்னரே  இன்று உரிமையாளரிடமிருந்து காரை கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட இந்த வாகனம் பின்னர் எல்பிட்டிய – அம்பலாங்கொட பிரதான வீதியின் உரன்வல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி வயல்வெளிக்குள் சென்றுள்ளது.

இந்த விபத்தையடுத்து அதில் இருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.