சுகாதார அமைச்சு தீர்மானத்திற்கு அமைவாக இன்று முததல் ஒரு வாரத்திற்கு டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுதைத் தொடர்ந்து கிளிநொச்சியில் இன்று சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வரை துப்புரவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கரைச்சி பிரதேச செயலகம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், கிளிநொச்சி வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் சிரமதானப் பணிகளில் இணைந்து கொண்டனர்.