எந்தவித மதிப்பீட்டு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலே அரசாங்கம்வற் வரி அதிகரிப்பை மேற்கொள்ளநடவடிக்கை எடுத்துள்ளது. இது பாரதூரமான பிரச்னையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் அரசாங்கம் வற் வரியை நூற்றுக்கு 18 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்த அதிகரிப்பால்மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பhக அரசாங்கத்துக்கு முறையாக பதில்தெரிவிக்காமல் இருக்கிறது.
ஏனெனில் வற் வரி அதிகரிப்பு மேற்கொள்ளும்போது அதுதொடர்பாக எந்தமதிப்பீட்டுநடவடிக்கையும் மேற்கொள்ளாமலே இதனை அரசாங்கம்செய்திருக்கிறது.வற் வரியை அதிகரித்த பிறகு இது
போன்ற கணக்கெடுப்பை மேற்கொள்வது கடும் பிரச்சினைக்குரிய விடயமாகும். வற்வரி அதிகரிப்பதற்கு முன்னர் இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புதொடர்பாக மதிப்பிட்டு ஆராய்ந்த
பின்னரே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் வற் வரி உயர்வால் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் தோட்டப்புறசமூகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்குறித்து அரசாங்கம் தற்போது கணக்கெடுப்பு நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. முறையான நிதி நிர்வாகத்தில்வரிகளை விதிக்கும் அல்லது அகற்றும்முன் நிதி தாக்க மதிப்பீடு செய்யவேண்டும்.
ஆனால் அரசாங்கம் இவ்வாறானதொன்றை முன்னெடுக்கவில்லை.அத்துடன் வற் வரி அதிகரிக்கப்பட்டபோது பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவிக்கிறது. ஆனால் சந்தையில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருப்பதுஅரசாங்கத்துக்கு தெரியாமல் இருக்கிறது.
அதனால் சீனி,பருப்பு,மிளகாய்,கீரிசம்பா,சம்பா போன்றவற்றின் விலைஎவ்வாறு உயர்ந்துள்ளது என்பதை சந்தைக்குச் சென்று ஆராய்ந்து பாருங்கள் என்றார்.
0000000000000000