சீரற்ற காலநிலை : 178,312 பேர் பாதிப்பு !

0
92
நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக 178,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.53,641 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், சீரற்ற காலநிலையினால் கிழக்கு மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 52,652 குடும்பங்களை சேர்ந்த 174,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.