பரீட்சைக்கு முன்னரே வினாத்தாள் வெளியான விவகாரம்

0
91

கல்விப் பொதுத் தராதர  உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் 1 மற்றும் 2 வினாத்தாள்கள்  பரீட்சைக்கு முன்னரே வெளியான விவகாரம் தொடர்பில்  சந்தேகத்தில்   கைது செய்யப்பட்ட மூவரும் எதிர்வரும் பெ்பரவரி மாதம்  2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை பிரதான நீதிவானும்  மேலதிக மாவட்ட நீதிபதியுமான   நவோமி விக்ரமரத்னவே இவர்களை தொடர்ந்தும் விளக்கமயிலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

பரீட்சைக்கு முன்னரே இந்த வினாத்தாள்கள் வெளியான விவகாரம் தொடர்பில்  விசாரணைகளை முன்னெடுத்துவரும்  பொலிஸார்  இதுவரை மூவரை சந்தேகத்தின் பேரில்  கைது செய்துள்ளனர்.