28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பரிதாபமாக நிகழ்ந்த மரணம்!

தம்புள்ளை, சிசிரவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற தபால் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் மரத்தை வெட்ட முற்பட்டு அதே மரத்தடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை சிசிரவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ. எம். ஜெயசேன என்ற 73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த அனர்த்தம் நேற்று இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை, அத்துபாராய பிரதேசத்தில் உள்ள நண்பனின் தோட்டத்தில் உள்ள பெரிய மரத்தை வெட்டுவதற்காக பலர் ஒன்று கூடியிருந்தனர்.

50 அடிக்கு மேல் உயரமுள்ள குறித்த மரத்தை சிலர் வெட்டிக் கொண்டிருந்த போது மரத்தின் நடுப்பகுதியில் கயிற்றை வைத்து சிலர் மரத்தை கவிழ்க்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது மரம் கீழே முறிந்த விழுந்ததால் அந்த நபர் அதற்கு அடியில் புதைந்துவிட்டார்.

சம்பவத்தின் பின்னர், பிரதேசவாசிகள் அந்த நபரை மரத்திலிருந்து வெளியே இழுத்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles