வெலிக்கடை சிறை வைத்தியசாலையில் நோயாளிகள் அதிகரிப்பு

0
94

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால் தற்போது 344 கைதிகள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களில் 54 கைதிகள் அம்மைநோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் ஐந்து விடுதிகள் காணப்படுகின்றன.

இங்கு கிளினிக்கில் சிகிச்சைபெறும் நோயாளிகள் 61 பேரும் 62 தொற்றா நோயாளிகளும், 82 தொற்று நோயாளிகளும், 110 மன நோயாளிகளும் 29 காசநோயாளிகளும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாடு முழுவதும் 30 சிறைச்சாலைகள் காணப்படுகின்றன.
ஒவ்வொரு சிறைக்கும் தனி மருத்துவமனை உள்ளது.

ஆனால் வெலிக்கடை பிரதான சிறைச்சாலை வைத்தியசாலையில் மாத்திரமே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.