கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றத் திட்டம்

0
73

நாட்டில் புனர்வாழ்வு நடவடிக்கைகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தை பிறிதொரு இடத்துக்கு மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.