முன்னாள் கால்பந்து வீரருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை

0
101

பார்சிலோனா நைட் கிளப்பில் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் முன்னாள் பார்சிலோனா மற்றும் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ் குற்றவாளி என ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆல்வ்ஸுக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல கால்பந்து வீரர்களில் ஒருவரான 40 வயதான ஆல்வ்ஸ் மீது, கடந்த 31 டிசம்பர் 2022இல் குறித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததை மறுத்தார். இருப்பினும், இக்குற்றச்சாட்டு குறித்த அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தைத் தவிர, அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை நிரூபிக்கும் ஆதாரங்களுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.