யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் மக்கள் வழிபாடு

0
90

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயங்களில் சுமார் 34 வருடங்களின் பின்னர் மக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இன்று ஒருநாள் வழிபாடுகளை மேற்கொள்ள மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் இராணுவத்தினரின் பேருந்துகளில் மக்கள் குறித்த ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் கைபேசி, கமெரா போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதற்காக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் 290 பேர் முற்பதிவுகளை மேற்கெண்டிருந்தனர்.

கட்டுவன் காசியம்பாள் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம், மானப்பிராய் பிள்ளையார், சிவன் ஆலயம், வன்னியர் ஆலயம், சக்தியுடையாள் அம்மன் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களுக்கு மக்கள் சென்றிருந்தனர்.

இதனிடையே 34 வருடங்களாக ஆலயங்கள் பாவனையற்று இருப்பதால் கட்டங்கள், கூரைகள் சேதமடைந்து காணப்படுவதுடன் ஆலய விக்கிரகங்கள், வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக ஆலயத்தை பார்வையிட்ட பக்தர்கள் தெரிவித்தனர்.