கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில், தற்போது நிலவும் கடும் வெப்பம், மார்ச் மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குருணாகலில், நேற்று அதிகூடிய வெப்பநிலையாக, 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இந்த வெப்பம் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில், நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.