பங்களாதேஷில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மருத்துவ பீட மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டை விரிவுரையாளர் ஒருவர் நடத்தியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ரைஹான் ஷெரீப் என்ற அந்த விரிவுரையாளரை கைது செய்யக் கோரி மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து நேற்று (06) கைது செய்யப்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
அந்த மருத்துவக் கல்லூரியில் இந்த காலப்பகுதியில் பரீட்சை நடைபெற்று வருகின்றன.
அங்கு நடைபெற்ற வாய்மொழி தேர்வின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அங்கு, விரிவுரையாளருக்கும், 23 வயது மருத்துவ பீட மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும் மாணவனின் சட்டை பையில் இருந்த கையடக்க தொலைபேசியில் தோட்டா பாய்ந்துள்ளது.
ஆனால் அவரது முழங்கால் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.