பிணை கோரிய கெஹெலிய- விண்ணப்பம் மீதான தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டது!

0
122

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் பிணை கோரிய சீராய்வு விண்ணப்பம் மீதான தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில், நீதிபதி சுஜீவ நிசங்க முன்னிலையில் குறித்த மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி குறித்த மனு தொடர்பான தீர்ப்பை வழங்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக நீதிமன்றத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்றைய மனுமீதான விசாரணையின் போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், தமது அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்திருந்தார்.