அம்பாறை கல்முனை கல்வி வலயத்தால், காஸாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, மூன்று இலட்சம் ரூபா நிதி வழங்கி
வைக்கப்பட்டுள்ளது.
வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம், கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முதற்கட்ட காசோலையினை வழங்கி வைத்தார்.
வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் நேற்று நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே
காசோலை வழங்கப்பட்டது.
வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார், கல்விசார ஊழியர்கள் மற்றும் அதிபர்களின்
நிதிப்பங்களிப்புடன் இத் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.
இப்தார் நிகழ்விற்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இத் தொகையானது திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கல்முனை கல்வி வலயத்தால், மூன்று இலட்சம் ரூபா உதவித் தொகை