ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0
88

தாய்வான் நாட்டின் தலைநகரில் நேற்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியிருந்தது. இதனை தாய்வான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், ஜப்பானின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2ஆவது முறையாக இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் 32 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.