வைத்தியர் சமல் சஞ்சீவவை மீண்டும் சேவைக்கு உள்வாங்குமாறு பரிந்துரை!

0
69
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள வைத்தியர் சமல் சஞ்சீவவை மீண்டும் சேவைக்கு உள்வாங்குமாறு அரச சேவைகள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைத்துள்ளது.ஹம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் சிறுவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுவதாக அவரால் சர்ச்சைக்குரிய கருத்தொன்று முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை பணி இடைநீக்கம் செய்வதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.எவ்வாறாயினும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்த வைத்தியர் சமல் சஞ்சீவ தமக்கு 10 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற பொது மனுக்கள் பற்றிய குழுவிலும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வைத்தியர் சமல் சஞ்சீவவை மீண்டும் சேவைக்கு உள்வாங்குமாறு அரச சேவைகள் ஆணைக்குழு சுகாதார அமைச்சுக்கு பரிந்துரைத்துள்ளது.