மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்து வரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி விசஐந்துகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கூழாவடி பகுதிக்குள் இன்று முதலையொன்று நுழைந்த நிலையில், மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதி அருகே நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் குடியிருப்புப்பகுதிக்குள் நுழைந்ததனால் பதற்ற நிலைமையேற்பட்டது.
முதலை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் முதலையை பாதுகாப்பாக மீட்டுச் சென்றனர்.
மழையுடனான காலநிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.