இப்படியும் நடக்கிறது

0
102

நேற்றைய தினம் இந்தப் பத்தியில் வடக்கு மாகாண அவைத் தலைவர், தமிழ் பொது வேட்பாளர் குறித்து தெரிவித்திருந்தமை பற்றி எழுதியிருந்தேன். அதாவது, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சுமந்திரன் கருத்துச் சொன்ன மறுதினமே சிவஞானம் ஐயா கருத்துச் செல்லியதாக எழுதியிருந் தேன். ஆனால், அப்படியல்ல பல நாட்களுக்கு முன்னரே ஓர் இணைய ஊடகம் ஒன்றுக்கு தனது கருத்தைத் தெரிவித்து விட்டேன் என்கிறார் சிவ ஞானம் ஐயா. அந்த ஊடகத்தில் அவர் சொன்னதை அறி யாமல் இருந்தது இந்த ஊர்க்குருவியின் தவறுதான். இனி இன்றைய விடயத் துக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் – முக்கிய தலைவர்களாகவும் இருக்கும் சுமார் பன்னிரண்டு பேர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் விரைவில் இணையவிருக்கின்றனர் என்ற செய்தி தெற்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. பிரசன்ன ரணதுங்க, மகிந்தானந்த அளுத்கமகே, ஷெஹான் சேமசிங்க, ரமேஷ் பத்திரண, காஞ்சன விஜய சேகர, பிரமித தென்னகோன், அலி சப்ரி, எஸ். பி. திஸநாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, பந்துல குணவர்த்தன, சுசில் பிரேமஜயந்த, விதுர விக்கிரமநாயக்க ஆகியோருடன், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் இவ்வாறு கட்சிதாவுவோரில் முக்கியமானவர்கள் என்கின்றன தெற்கு செய்திகள்.
தமது கட்சியின் முக்கிய தலைவர்களை தமது கட்சியிலிருந்து பிரித்து எடுக்கும் ரணிலின் முடிவு பெரமுன கட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருப்பதாகவும் குறிப்பாக, அண்மையில் அதன் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அண்மைக்காலமாக பொதுஜன பெரமுன விடுத்த எந்த ஒரு கோரிக்கையையும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க கண்டுகொள்ளவில்லை.
கடைசியாக அவர்கள் பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே வைக்குமாறு விடுத்த கோரிக்கையை ரணில் நிராகரித்ததுடன் இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக வைக்குமாறு விடுத்த கோரிக்கையையும் நிராகரித்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்த பொதுஜன பெரமுன தமது கட்சி சார்பில் ஒருவரை ஜனா திபதி வேட்பாளராக நிறுத்தப்போவதாக அறிவித்து ரணிலுக்கு அதிர்ச்சி வைத்தி யம் கொடுக்க முனைந்தது. பெரமுனகாரர்களின் இந்தக் ‘குடைச்சலை’ தாங்கமுடியாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
அந்தக் கட்சியின் முக்கிய தலைவர் களை தூக்கி எடுத்து தனது கட்சிப் பலத்தை அதிகரிக்க இப்போது முயன்றிருக்கிறார். எப்போதுமே மகிந்த குடும் பத்துக்கு ‘ஆகாதவராக’ இருந்துவந்த சந்திரிகா பண் டாரநாயக்கா குமாரதுங்கவும் ரணிலின் இந்த ‘ஒப்ரேஷனி’ல் பின்னாலிருந்த உதவினார் என்று ஒரு செய்தி தகவல் தந்தது. தமது கட்சியின் முக்கிய தலைவர்களை ரணில் பிரித் தெடுப்பது பெரமுனவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந் தாலும் தமது நீண்டகால நண்பரும் ராஜபக்ஷ குடும்பத் தின் மிக நம்பிக்கைக்குரியவரு மான தினேஸ் குணவர்த்தனவும் இவ்வாறு கட்சி தாவ முடிவெடுத்திருப்பதே ராஜபக்ஷ குடும்பத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்கின்றன தெற்கின் செய்திகள்.
கோட்டாபய ஆட்சிக் காலத்தின்போது, கோவிட் பெருந்தொற்று காலத்தில், சர்ச்சைக்குரிய பலவந்த தகனக் கொள்கையை ஏற்றுக்கொள் ளுமாறு தம்மைக் கட்டா யப்படுத்தியதாக குற்றம்சாட் டியுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பரபரப்பான குற்றச்சாட்டு இலங்கையின் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந் தது. ஒரு காலத்தில் கோட்டா பய ராஜபக்ஷ குடும்பத்தின் தீவிர ஆதரவாளரும் பொது ஜன பெரமுனவின் உறுப்பின ருமான சப்ரி, இப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டு தனது முன்னாள் கூட்டாளி களுக்கு எதிராகப் பேசி வருகி றார். முஸ்லிம்களின் மத நம்பிக்கைக்கு விரோதமாக கோவிட் தொற்றால் மரண மடைந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்த போது அமைச்சராக இருந்தவர் இந்த அலி சப்ரி. அப்போது தன்னை அவர்கள் பலவந்தப்படுத்தினர் என்று அவர் கூறியிருந்தமை கட்சியிலிருந்து வெளியேறும் தனது முடிவுக்கு வலுச்சேர்ப்பதற்காகத்தான் என்கின்றன சில செய்திகள்.
பொதுஜன பெரமுனவிலிருந்து முக்கிய தலைவர்களை ரணில் பிரித்து எடுத்தது பற்றி எழுதியுள்ள ஒரு தெற்கு ஊட கம்: ‘பௌத்த – சிங்கள வாக்கா ளர்கள் மத்தியில் மகிந்த ராஜ பக்ஷவின் வாக்குத் தளத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறைத்து மதிப்பிடுவது அவரின் அரசியல் எதிர்காலத்தில் நீண்டகால விளைவு களை ஏற்படுத்தக்கூடிய ஒரு மூலோபாய தவறு.’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. – ஊர்க்குருவி.