அமெரிக்காவில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட பாலம்!

0
125

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்ட்டிமோரில் அண்மையில் பாரிய சரக்கு கப்பல் மோதி சேதமடைந்த ஆற்றுப் பாலம் வெடிவைத்து முழுமையாக தகர்க்கப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் பால்டிமோர் நகரிலுள்ள படாஸ்ப்ஸ்கோ நதி வழியாக இலங்கை நோக்கி பயணித்த சரக்கு கப்பல் எதிர்பாராத விதமாக ஆறறின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதியது. இதில் அந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த குறித்த பாலத்தின் எஞ்சிய பகுதிகளை அதிகாரிகள் வெடிவைத்து தகர்த்தியுள்ளனர்.
இதன் மூலம் படாஸ்ப்ஸ்கோ நீர்வழித்தடத்தை சுத்தம் செய்யும் பணிகளில் முக்கிய மைக்கல் எட்டப்பட்டுள்ளதாக, பால்டிமோர் நகர மேஜர் குறிப்பிட்டுள்ளார்.