கொழும்பு – பதுளை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 27 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது 27 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.