தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு நல்லூர் கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட க.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டம் இறுதித் தீர்வல்ல.
தற்போதுள்ள 13ஆம் திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன.
ஒற்றையாட்சி முறைமை கொண்ட அரசமைப்பை ஏற்பதற்கு தமிழ்மக்கள் தயாராக இல்லை.
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய தீர்வே எமக்கு தேவை என சஜித் பிரேமதாஸவிடம் வலியுறுத்தினார்.