ஐக்கிய அமெரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் கூட்டாக நடத்தும் 9ஆவது ரி -20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் நடப்பு சம்பியன் இங்கிலாந்து முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த குழு 2க்கான சுப்பர் 8 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை நையப்புடைத்து 10 விக்கெட்களால் வெற்றிபெற்றதன் மூலம் இங்கிலாந்து அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
கிறிஸ் ஜோர்டன் பதிவு செய்த ஹெட்-ட்ரிக் உடனான 4 விக்கெட் குவியல், அணித் தலைவர் ஜொஸ் பட்லரின் அதிரடி துடுப்பாட்டம் என்பன இங்கிலாந்தின் வெற்றியை மிகவும் இலகுவாக்கியதுடன் நிகர ஓட்ட வேகத்தையும் கணிசமான அளவு அதிகரிக்கச் செய்தது.
தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான நாளைய போட்டியில் வெற்றிபெறும் அணி குழு 2இலிருந்து 2ஆவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.