ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் (LPL) போட்டியில் பங்குபற்றும் 5 அணிகளின் விபரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டது.
இந்த வருடப் போட்டியில் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், காலி, தம்புள்ளை ஆகிய பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகள் விளையாடவுள்ளன.
இந்த வருட எல்பிஎல் போட்டிகள் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.