எதிர்வரும் 9ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள சுகவீன விடுப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்.உதயரூபன் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.