தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக பொதுக் கட்டமைப்பு விசேட கூட்டம்!

0
113

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டம் இன்று யாழில் இடம்பெற்றது.

இதன்போது பொதுக் கட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டு முக்கிய சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.இக்கலந்துரையாடலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சித் தலைவர் ந.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், ஜனநாயகப் போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன், முன்னாள் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஸ், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், ஜதீந்திரா, சி.யோதிலிங்கம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள், பொதுக் கட்டமைப்பினர் கலந்துகொண்டனர்.