சிறுவர் பாதுகாப்பு வார நிகழ்ச்சிகள், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னெடுப்பு

0
124

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று கொக்குத்தொடுவாய் மதுரம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தால், சிறுவர் பாதுகாப்பு வார நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன.
சிறுவர் பாதுகாப்பு வாரம் தொடர்பில் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில், சித்திரப் போட்டி பெற்றோர்கள் மத்தியில் நடாத்தப்பட்டது.

மதுரம் சிறுவர் அபிவிருத்தி நிலைய பணியாளர்களால், வீதி நாடகங்களும், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, நாயாறு, கொக்குளாய் போன்ற பிரதேசங்களில் அரங்கேற்றப்பட்டன. சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுத்தல், சிறுவர் உரிமைகள் மறுக்கப்படுவதைத் தவிர்த்தல் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தி, விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.