நாட்டில் குழப்பநிலை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும் வன்முறை வெடித்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.