முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இறைச்சிக்காக மாடுகளை திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இறைச்சிக்காக பொதுமக்களின் மாடுகளை திருடிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக பொதுமக்களின் மாடுகள் திருடப்பட்டு இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்தமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.சந்தேகத்தின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.