இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள்!

0
73

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 தமிழக மீனவர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மினவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.