நுவரெலியா, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லொய்னொன் தோட்டப் பகுதியில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை (25) பிற்பகல் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவை, லொய்னொன் தோட்டப் பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஆவார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது திக்ஓயா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.