அம்பாறை ஆலையடிவேம்பில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணம்

0
24

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு, நேற்றைய தினம், 4 ஆயிரம் ரூபா
பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச வெளிநாட்டு வாழ் உறவுகளால், ‘உறவுகளுக்க உதவுவோம்’ எனும் அமைப்பின் ஊடாக, பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில், இவ் உணவுப் பொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. ஆலையடிவேம்புபிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உட்பட பலரும் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் இணைந்திருந்தனர்.