முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 16. 2 ஓவர்களிலேயே 102 ஓட்டங்கள் குவித்து அவுஸ்திரேலியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.
இதில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, அவுஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷட்டின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.
இந்திய அணியில் ஹர்லீன் தியோல் (19 ஓட்டங்கள்), ஹர்மன்ப்ரீத் கவுர் (17 ஓட்டங்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (23 ஓட்டங்கள்) மற்றும் ரிச்சா கோஷ் (14 ஓட்டங்கள்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.
- 2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 100 ஓட்டங்களில் சுருண்டது. அவுஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக மேகன் ஷட் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 101 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான லிட்ச்பீல்ட் மற்றும் ஜார்ஜியா வால் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
இதனால், வெறும் 16. 2 ஓவர்களிலேயே 102 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ஜார்ஜியா வால் 46 ஓட்டங்களும், லொட்ச்பீல்ட் 35 ஓட்டங்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்களும், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.