மட்டக்களப்பு பெரியகல்லாறு மெதடிஸ்த திருச்சபையினால் பிரம்மாண்டமான கிறிஸ்மஸ்மரம் திறப்பு

0
18

மட்டக்களப்பு பெரியகல்லாறு மெதடிஸ்த திருச்சபையின் 2024ஆண்டிற்கான பிரம்மாண்டமான கிறிஸ்மஸ் மரம் ஒளியூட்டப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.
கிறிஸ்து பிறப்பு இன்னிசை வழிபாட்டை தொடர்ந்து கல்லாறு திருச்சபையின் சபைக்குரு அருட்திரு எஸ்.திருமறைதாசன் மற்றும் சேகர குருமார்களினாலும் கல்லாறு மெதடிஸ்த திருச்சபை மக்களினாலும் வெகுவிமர்சையாக இனிப்பு பண்டங்கள் வழங்கி கிறிஸ்துவின் பிறப்பை வெளிப்படுத்தும் முகமாக ஒளியூட்டப்பட்ட கிறிஸ்மஸ் மரம் திறந்துவைக்கப்பட்டது.

இதில் சிறப்பம்சமாக கிறிஸ்மஸ் மரத்தினை அலங்கரிப்பதற்கு 30,000 இற்க்கும் மேற்பட்ட எல் ஈ டி மின்குமிழ்களை கொண்டு வடிவமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.