மட்டக்களப்பு ஆரையம்பதி பாலமுனை முகைதீன் ஜூம் ஆப் பள்ளிவாயல் உண்டியல் களவாடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பள்ளி வாயலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் பள்ளி வாயல் உண்டியலை திருடுவது பள்ளி வாயலின் சி.சி.ரி.வி.காணொளியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக பள்ளி வாயல் நிர்வாகத்தினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.