காலி சிறைச்சாலையில் நேற்று பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.
இந்நிலையில், காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.