யு.எஸ்.எயிட் நிதியுதவிகள் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும்

0
10

இலங்கையில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

தனது எக்ஸ் தளத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிதியிலிருந்து பயனடைந்த அரசு சாரா நிறுவனங்களின் கணக்கு உட்பட, விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் மனிதாபிமான உதவி எனும் போர்வையில் ஏனைய நாடுகளில் ஸ்திரமின்மையை உருவாக்க சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

இலங்கை அண்மைய ஆண்டுகளில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்திலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களைப் பெற்றுள்ளதாகவும் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெளிவான கணக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.