இறுதிச் சடங்கு வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த மூன்று பேர் மாரஸ்ஸன மருத்துவமனை மற்றும் கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தலாத்துஓயா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தலாத்துஓயாவின் அகலவெல பகுதியில் நேற்று இடம்பெற்றதோடு ஒரு பெண் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.இறுதிச் சடங்கு நடைபெற்ற வீட்டிற்கு அருகில் இரவில் சிலர் சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.ஒரு வாக்குவாதம் காரணமாக இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர் பின்னர் தன்னைத் தாக்கிய மற்றொரு நபரின் வீட்டிற்குச் சென்று அந்த வீட்டில் உள்ள சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததாகவும் தாக்குதல் நடத்தியவரின் தந்தையையும் தாக்கியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வீட்டில் தங்கியிருந்தவர்களின் தாக்குதலால் அந்த நபருக்குத் தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த நபர் மாரஸ்ஸன அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.தலாத்துஓயா காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.