வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தவறான முடிவெடுத்து குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
26 வயதுடைய தனுசன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.